நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன. தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள மணிபாரதி. செல் : 09380083338

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ellameytamil.com

Friends

Saturday, June 26, 2010

புவிஈர்ப்பு எதிரி! ( Earth Quake )


நான்கு சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றன என்று இத்தனை காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். அந்த நம்பிக்கையை மாற்றிக் கொள்ளும் வகையில், ஐந்தாவது சக்தி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நான்கு சக்திகள் என்னவென்றால்... புவி ஈர்ப்பு சக்தி, மின்காந்த சக்தி, அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி, அணுவுக்குள் இருக்கும் மெல்லிய சக்தி. இதில் புவி ஈர்ப்பு சக்தியை பற்றி எல்லாருக்கும் தெரியும்.

மேலே இருந்து பொருள் கீழே வருவதே இதனால்தான். அடுத்ததாக மின்காந்த சக்தி. இந்த சக்தியை கொண்டுதான் "டிவி', ரேடியோ அலைகள், "டிவி' ரிமோட், மொபைல்போன் போன்றவை இயங்குகின்றன. மூன்றாவது சக்தி அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி ஆகும்.

அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள் இருக்கின்றன. இவற்றில் புரோட்டானையும், நியூட்ரானையும் ஒட்ட வைக்கும் சக்தியே அணுவுக்குள் இருக்கும் வலிமையான சக்தியாகும்.

இந்த சக்தியை எரித்துதான் சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் ஒளிர்கின்றன. அணுவுக்குள் இருக்கும் மெல்லிய சக்தி என்பது அணுவின் மையத்தில் இருக்கும், "நியூக்ளியஸ்' என்ற உட்கரு வெளிப்படுத்தும் சக்தி தான்.

இதைத்தான் அணுசக்தி என்று அழைக்கிறோம். எப்படியோ இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம். இந்த நான்கு சக்திகளுக்குள்தான் எல்லாம் அடங்கி இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதினர். சமீபத்தில் அவர்கள் ஐந்தாவதாக ஒரு சக்தி இருக்கிறது என்றும், அதன் பெயர் புவிஈர்ப்பு எதிர்ப்பு சக்தி என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சுருங்கி கொண்டே போகிறது. இந்த இடங்கள், "கறுப்பு பள்ளங்கள்' என்று அழைக்கப்படுகிறது.

"கருப்பு பள்ளங்கள்' சூரிய மண்டலத்திற்கு அப்பால் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறது. இதன் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் அதை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

இந்த ஈர்ப்பில் இருந்து சூரியன், பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவும் தப்ப முடியாது. இதை கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானியான டாக்டர் எஸ்.சந்திரசேகரன்.

மிகச்சமீப காலத்தில்தான் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக புவிஈர்ப்பு எதிர்விசை இருப்பதையும் கண்டறிந்து இருக்கின்றனர். அது பிரபஞ்சம் முழுவதும் உள்ள பொருட்கள் எல்லாம் பிரபஞ்சத்திற்கு வெளியே எங்கோ ஒரு இடத்தை நோக்கி, வினாடிக்கு 700 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஏதோ ஒரு பொருளை நோக்கி ஓடி கொண்டிருப்பதையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இது எப்படி? எதனால்? என்பது புதிராக உள்ளது. இந்த ஐந்தாவது சக்தி பிரபஞ்சத்தையே அழித்து விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment




அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


படித்ததில் பிடித்தது !!!



ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

My Blog List

 

Azhahi.Com Copyright © 2011 Azhahi.Com is Designed by ManibharathiAzhahi Theme is Developed by WebIndia InfoTech